சங்கரய்யா கொள்கைகளை பின்பற்று வோம், அவர் கனவு கண்ட சாதியற்ற, சுரண்டலற்ற சமூகத்தைப் படைப்போம் என அவரது இரங்கல் கூட்டத்தில் உரையாற்றிய தலைவர்கள் சூளுரைத்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர், தகைசால் தமிழர் தோழர் என்.சங்க ரய்யா உடல் அரசு மரியாதையுடன் வியாழ னன்று (நவ. 16) சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம்செய்யப்பட்டது.
அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தலைமையேற்றார். இக்கூட்டத் தில் சீத்தாராம் யெச்சூரி, அசோக் தாவ்லே, ஏ.கே.பத்மநாபன், என்.ராம், கி.வீரமணி, வைகோ, தொல்.திருமாவளவன், பெரியசாமி, ஆசைத்தம்பி, சீமான், கு.ஜக்கையன், பி.கே. ஸ்ரீமதி உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றின
கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், தோழர் என்.சங்கரய்யா உடலுக்கு மருத்துவ மனையிலேயே வந்து முதல் மரியாதை செலுத்தி, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்ச ருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் தோழர் சங்கரய்யா உடலுக்கு கட்சி வேறுபாடின்றி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய அனைத்துக் கட்சித் தலைவர் களுக்கும், அமைப்புகளின் நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலை வர்கள் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளனர். அவர்களுக்கும் இங்கு வருகை தந்துள்ள பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தோழர் சங்கரய்யா பல ஆண்டு காலமாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை செய்துகொண் டார். கொரோனா காலத்தில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 20 நாட்கள் சிகிச்சை பெற்றார். இத்தனை ஆண்டு காலம் வாழ்வ தற்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் உடல் நலம் பாதிக்கப் பட்டு 10 ஆண்டுகாலம் வீட்டிலேயே இருந்தார். இந்த 10 ஆண்டு காலமும் அவரை பாசமுடன் பராமரித்த அவருடைய குடும்பத்தை சேர்ந்த வர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
குடும்பத் தலைவரை இழந்ததைப்போல்...
பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை தோழர் சங்கரய்யா பெற்றிருந்தார். அனை வரையும் உள்வாங்கிய குடும்பமாக அந்த குடும்பம் திகழ்ந்தது. ஒரு இமயம் சரிந்து விட்டது போன்ற உணர்வு தான் எங்களுக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்ற மகத்தான இயக்கத்தைக் கட்டிக் காத்த அந்த தலைவர் இன்றைக்கு மறைந்து விட்ட சூழலில், குடும்பத் தலைவரை இழந்த ஒரு குடும்பம் எப்படி தவிக்குமோ அப்படித்தான் தவித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
கட்சிக் கட்டுப்பாடு
‘‘ஒரு கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்பதின் அடையாளமாக தோழர் சங்கரய்யா திகழ்ந்தார். தனது இறுதிமூச்சு வரை கட்சி கட்டுப்பாட்டை உறுதியுடன் பின்பற்றுகிற ராணுவத் தளபதியைப் போல் திகழ்ந்தார்’’ என புகழாரம் சூட்டினார் கே.பாலகிருஷ்ணன்.